வழிபாடு
ஸ்ரீ காளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழா 8-ந் தேதி நடக்கிறது
7-ந்தேதி மாலை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் கங்கை அம்மன்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் பட்டு புடவைகள் வழங்கப்படும்.
ஸ்ரீ காளஹஸ்தியில் வருகிற 8-ந் தேதி ஏழு கங்கை அம்மன் திருவிழா நடக்க உள்ளது. அப்போது நகரில் ஏழு பகுதிகளில் கங்கையம்மன்களை நிறுத்தி நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். முன்னதாக 7-ந் தேதி மாலை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் கங்கை அம்மன்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் பட்டு புடவைகள் வழங்கப்படும். அன்று இரவு 12 மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள முத்தியாம்மன் கோவில் தெருவில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்.
8-ந் தேதி காலை ஏழு பகுதிகளில் கங்கையம்மன்களை நிறுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் ஊர்வலமாக சென்று 12 மணிக்கு அம்மன்களை கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் நிமஞ்சனம் செய்வார்கள்.
8-ந் தேதி காலை ஏழு பகுதிகளில் கங்கையம்மன்களை நிறுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் ஊர்வலமாக சென்று 12 மணிக்கு அம்மன்களை கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் நிமஞ்சனம் செய்வார்கள்.