ஆன்மிகம்
கானூர் 24 அடி உயர பக்த ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்

கானூர் 24 அடி உயர பக்த ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்

Published On 2021-11-16 07:22 GMT   |   Update On 2021-11-16 07:22 GMT
யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று பக்த ஆஞ்சநேயர் சாமி சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் 24 அடி உயர பக்த ஆஞ்சநேயர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று பக்த ஆஞ்சநேயர் சாமி சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News