ஆன்மிகம்
ஞானசபையில் ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞானசபையில் நாளை ஜோதி தரிசனம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-08-06 09:50 IST   |   Update On 2021-08-06 09:50:00 IST
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் மாத பூச ஜோதி தரிசனத்தை வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் நேரலையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இந்த சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தையொட்டி ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி ஆடி மாதத்திற்கான ஜோதி தரிசனம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஆனால் இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வள்ளலார் தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசாணை மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படியும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும், பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, 7-ந்தேதி(அதாவது நாளை) நடைபெறும், மாத பூச ஜோதி தரிசனத்தின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை, மாத பூச ஜோதி தரிசனத்தை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனல் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற தளத்தில் நேரலையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News