ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

Published On 2021-07-13 03:08 GMT   |   Update On 2021-07-13 13:04 GMT
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இணையதள முகவரி sabarimalaonline.org என்றும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு செய்த பக்தர்கள் 17-ந் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News