ஆன்மிகம்
ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை
தலைவாசல் அருகே பழமை வாய்ந்த காமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை காலபைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
தலைவாசல் அருகே காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை காலபைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.