ஆன்மிகம்
கெங்கையம்மன்

எல்.ஜி.புதூர் கிராமத்தில் சாலை கெங்கையம்மன் திருவிழா

Published On 2021-07-05 12:36 IST   |   Update On 2021-07-05 12:36:00 IST
கெங்கையம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
காட்பாடியை அடுத்த எல்.ஜி.புதூர் கிராமத்தில் சாலை கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் சிரசு பிள்ளையார் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு கெங்கையம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், எல்.ஜி.புதூர் கிராம மக்கள் செய்திருந்தனர். விருதம்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News