ஆன்மிகம்
ஹோமம்

திருவொற்றியூர் சிவா-விஷ்ணு கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2021-06-07 06:30 GMT   |   Update On 2021-06-07 06:30 GMT
திருவொற்றியூர் சிவா-விஷ்ணு கோவிலில் மிளகு, சீரகம், லவங்க பட்டை உள்ளிட்ட மூலிகை மற்றும் தானிய வகைகள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோவில் பகுதியில் உள்ள 21 அடி உயர வெள்ளை நிற லிங்கத்தில் அமைந்துள்ள கருப்பசாமி முத்தப்பர், சிவா-விஷ்ணுவாக காட்சி அளிக்கிறார்.

இந்தநிலையில் தற்போது உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டி சிவா-விஷ்ணு கோவிலில் மிளகு, சீரகம், லவங்க பட்டை உள்ளிட்ட மூலிகை மற்றும் தானிய வகைகள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள் கொண்டு சிவா-விஷ்ணுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவா-விஷ்ணு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெகு விரைவில் கொரோனா நோய் தொற்று நீங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுதல் வைத்து இந்த சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
Tags:    

Similar News