ஆன்மிகம்
தேரழந்தூர் மும்மூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

தேரழந்தூர் மும்மூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-05-31 12:18 IST   |   Update On 2021-05-31 12:18:00 IST
தேரழந்தூர் மும்மூர்த்தி விநாயகருக்கு அக்னி நட்சத்திரம் பூர்த்தியை முன்னிட்டு 108 இளநீர், 51 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
மயிலாடுதுறை அருகே தேரழந்தூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபமாக இந்த மும்மூர்த்தி விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்தியாவிலேயே மும்மூர்த்திகள் வடிவாக விநாயகர் கோவில் இங்கு மட்டுமே அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

இந்த விநாயகரை வழிபடுபவர்களுக்கு உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்பதும், குழந்தைப்பேறு கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்த கோவிலில் அக்னி நட்சத்திரம் பூர்த்தியை முன்னிட்டும், கொரோனா வைரஸ் தாக்கம் குறையவும் 108 இளநீர், 51 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சூரைத்தேங்காய் உடைத்து விநாயகருக்கு வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுவாமிராஜா குருக்கள் செய்தார். இதில் கொரோனா பரவல் காரணமாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Similar News