ஆன்மிகம்
சித்தானந்தா கோவிலில் குருபூஜை விழா இன்று நடக்கிறது
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் 184-வது ஆண்டு குருபூஜை விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் 184-வது ஆண்டு குருபூஜை விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரம ஹோமம், 8.45 மணிக்கு மகா அபிஷேகம், 9.45 மணிக்கு கலச புறப்பாடு, 10 மணிக்கு கலசாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே குருபூஜை விழாவை www.gurusithanandaswamy. org என்ற இணையதளத்தில் பக்தர்கள் காண்பதற்கு வசதியாக நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே குருபூஜை விழாவை www.gurusithanandaswamy. org என்ற இணையதளத்தில் பக்தர்கள் காண்பதற்கு வசதியாக நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.