ஆன்மிகம்
சிறப்பு பூஜை செல்போன் மூலம் ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை படத்தில் காணலாம்.

பவுர்ணமி சிறப்பு பூஜை: வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-05-27 10:18 IST   |   Update On 2021-05-27 10:18:00 IST
பவுர்ணமி சிறப்பு பூஜையை சில கோவில்களில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் மடிக்கணினி மூலம் தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுதலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் கோவிலுக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளதால் கோவில்களில் பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கோவையில் வைகாசி பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

காட்டூர் மணி முத்துமாரியம்மன் கோவிலில் சில கோவில்களில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் மடிக்கணினி மூலம் தரிசனம் செய்தனர்.

மேலும் சிறப்பு பூஜையையொட்டி அம்மன் கோவில்களில் அம்மனுக்கு பால், தேன், தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் நடந்தது. அதுபோன்று கொரோனா தாக்கம் குறையவும், உலக மக்களுக்கு நன்மை கிடைக்கவும் பூஜைகள் செய்யப்பட்டன.

Similar News