ஆன்மிகம்
வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-05-27 09:55 IST   |   Update On 2021-05-27 09:55:00 IST
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியில் மாரியம்மன் கோவிலில் வைகாசி பவுர்ணமியையொட்டி மாரியம்மனுக்கு பன்னிருவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த நிலையில் வைகாசி பவுர்ணமியையொட்டி மாரியம்மனுக்கு பன்னிருவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

பின்னர் கொரோனா தொற்று முற்றிலும் நீங்கி உலகமக்கள் நன்மையடைய வேண்டும் என்று அம்மனுக்கு கொரோனா தேவி முகபாவத்துடன் கைகளில் மூலிகை தீர்த்தம் அடங்கிய குடம், வேப்பிலை கொத்து ஆகியவற்றுடன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை செய்யப்பட்டது.

இந்த பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் கோவிலின் நுழை வாயிலுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.

Similar News