ஆன்மிகம்
ஆதிகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தபோது எடுத்தபடம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம்

Published On 2021-05-27 04:16 GMT   |   Update On 2021-05-27 04:16 GMT
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆதிகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார்.
திருச்செங்கோட்டில்  ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவை முன்னிட்டு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள்,  ஸ்ரீ செங்கோட்டுவேலவர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு சமூகத்தவர் சார்பில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வழிபாடு நடக்கும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையான முறையில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆதிகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News