ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

பிரதிஷ்டை தினம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Published On 2021-05-24 11:25 IST   |   Update On 2021-05-24 11:25:00 IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இதனையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

நேற்று வழக்கமான பூஜைகளுடன் 25 கலச பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

Similar News