ஆன்மிகம்
கனவில் நாக தரிசனம் கிடைத்தால் என்ன பலன்

கனவில் நாக தரிசனம் கிடைத்தால் என்ன பலன்

Published On 2021-05-13 07:57 GMT   |   Update On 2021-05-13 07:57 GMT
ஒரு சிலருக்கு ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். சிலருக்கு அடிக்கடி கனவில் பாம்பு வந்து கொண்டேஇருக்கும். அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். சிலருக்கு அடிக்கடி கனவில் பாம்பு வந்து கொண்டேஇருக்கும். நாக தரிசனம் தந்து கொண்டேயிருக்கும். அதற்கு காரணம் ராகு திசை, கேது திசை அல்லது ராகு புத்தி, கேது புத்தி நடைபெறும் நேரமாக இருந்தால் கனவில் பாம்பு வந்து காட்சியளிக்கும். சில சமயம் வசிக்கும் இடங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.

ராகு-கேதுக்களுக்குரிய பரிகாரங்களை முறையாகவும், முழுமையாகவும், உடனடியாகவும் செய்வது நல்லது. பாம்பு கனவில் வந்து கடித்து விட்டுச் சென்றால் தோஷம் விலகி விட்டதாக அர்த்தம். கனவில் ஜோடி நாகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி பின்னிப்பிணைந்த காட்சியைக் கண்டால் புத்திர பாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.
Tags:    

Similar News