ஆன்மிகம்
நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளிய காட்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு

Published On 2021-05-12 08:37 GMT   |   Update On 2021-05-12 08:37 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை தேர்த்திருவிழா நம்பெருமாள் ஆளும் பல்லக்குடன் நிறைவு பெற்றது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நம்பெருமாள் ஆளும் பல்லக்குடன் நேற்று நிறைவு பெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நடைபெறும்.

ஆனால் கொரோனா பரவல் தடை உத்தரவின் காரணமாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளினார்.

பின்னர் அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
Tags:    

Similar News