ஆன்மிகம்
நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-05-06 06:17 GMT   |   Update On 2021-05-06 06:17 GMT
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு பலவிதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் சிவகாமி அம்மன் மற்றும் நடராஜருக்கு பலவிதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து வில்வம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. . கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேக ஆராதனையில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News