ஆன்மிகம்
வேதாரண்யம் அன்னப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

வேதாரண்யம் அன்னப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-04-10 06:18 GMT   |   Update On 2021-04-10 06:18 GMT
வேதாரண்யம் நகரில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற அன்னப்ப சாமி கோவிலில் சாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் பழச்சாறுகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வேதாரண்யம் நகரில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற அன்னப்ப சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வேண்டி சாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் பழச்சாறுகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News