ஆன்மிகம்
உறையூர் கமலவல்லி நாச்சியார்

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் 8-ந்தேதி நடக்கிறது

Published On 2021-03-05 08:56 GMT   |   Update On 2021-03-05 08:56 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா 3-ந்தேதி தொடங்கியது.

வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார், 5.15 மணிக்கு தெப்ப மண்டபத்திற்கு வருகிறார். 6.45 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.

இரவு 8 மணிக்கு தெப்பமண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வருகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

வருகிற 9-ந்தேதி பந்தக்காட்சி நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருள்கிறார். 5 மணி முதல் 6.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார்.

இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில்இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News