ஆன்மிகம்
பொற்றையடி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பொற்றையடி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2021-02-01 03:11 GMT   |   Update On 2021-02-01 03:11 GMT
கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடியில் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர் கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடியில் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலையில் மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர்அழகேசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News