ஆன்மிகம்
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களின்றி எளிமையான முறையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் தை மற்றும் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று 2,108 பக்தர்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜைக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று பக்தர்களின்றி எளிமையான முறையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜைக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று பக்தர்களின்றி எளிமையான முறையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.