ஆன்மிகம்

தங்க கமல வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் வீதி உலா

Published On 2019-04-24 05:04 GMT   |   Update On 2019-04-24 05:04 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் முடிந்து 8-ம் நாள் அன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தேங்காய், பழக்கடை மற்றும் புஷ்பம் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியையொட்டி காலை 10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து அம்மன் புறப்பாடாகி வசந்த மண்டபம் சென்றடைந்தார்.

மாலை 3 மணிக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் எஸ்.ஆர்.மணிகண்டன், சிறுவடை வியாபாரிகள் சங்கத்தலைவர் சூறாவளி.பிச்சை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில், மேலாளர் ஹரிஹர சுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News