ஆன்மிகம்
விழுப்புரத்தில் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்
விழுப்புரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 10-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சூரிய பிரபை, அதிகாரநந்தி சேவை, நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம் ஆகியவற்றில் சாமி வீதிஉலா நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரஹன்நாயகியும், கைலாசநாதரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
இந்த தேர், விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு நடந்த தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் செல்வராஜ், அர்ச்சகர் வைத்தியநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், பிரதோஷ பேரவையினர் செய்திருந்தனர்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 10-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சூரிய பிரபை, அதிகாரநந்தி சேவை, நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம் ஆகியவற்றில் சாமி வீதிஉலா நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரஹன்நாயகியும், கைலாசநாதரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
இந்த தேர், விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு நடந்த தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் செல்வராஜ், அர்ச்சகர் வைத்தியநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், பிரதோஷ பேரவையினர் செய்திருந்தனர்.