ஆன்மிகம்

பாவங்களை போக்கும் ஆடிப் பவுர்ணமி

Published On 2018-07-27 13:29 IST   |   Update On 2018-07-27 13:29:00 IST
சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த பவுர்ணமி நாளில் தான் வருகின்றன.
சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, குரு பூர்ணிமா, ஹயக்ரீவர் அவதார தினம் ஆகிய மூன்றும் இந்த நாளில் தான் வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா மிகவும் சிறப்பாக பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பதினோராவது நாள் ஆடித்தபசு. ஆடித்தபசுக் காட்சியை கண்டால் பாவங்கள் அனைத்தும் கரைந்து மனது லேசாகும் என்பது நம்பிக்கை.

திருச்சி அருகே உள்ள உறையூரில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர், ஆடிப் பவுர்ணமி நாள் ஒன்றில் தான் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சி அளித்தாராம்.

வேதங்களை கடத்திப்போய், பிரம்மனின் படைப்பு தொழிலை ஸ்தம்பிக்கச் செய்தனர், மது, கைடபர் என்ற இரு அசுரர்கள். அதனால் பாதிக்கப்பட்ட பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். திருமால், குதிரை முகத்துடன் ஹயக்ரீ வராக தோன்றி கடலின் அடியிலிருந்த அசுரர்களோடு போரிட்டு வேதங்களை மீட்டு வந்த நாள் ஆடிப் பவுர்ணமி. 
Tags:    

Similar News