ஆன்மிகம்

அமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு சாக்லெட் அலங்காரம்

Published On 2018-07-13 03:51 GMT   |   Update On 2018-07-13 03:51 GMT
தா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 
Tags:    

Similar News