ஆன்மிகம்

தடையின்றித் தான, தர்மம் செய்பவர்கள் யார்?

Published On 2018-06-11 14:52 IST   |   Update On 2018-06-11 14:52:00 IST
எப்படிப்பட்ட ஜாதக அமைப்புக் கொண்டவர்கள் தங்கு தடையின்றித் தாராளமாக தான, தர்மம் செய்வார்கள் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு தானம் செய்யும் மனம் இருக்கும்; ஆனால் பணம் இருக்காது. ஒரு சிலரிடம் நிறைய பணம் இருக்கும்; ஆனால் தானம் செய்வதற்கு மனம் இருக்காது. மனமும், பணமும் இணைந்து யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தான, தர்மங்களை தடையின்றிச் செய்ய இயலும். தானம் செய்து புகழ்பெற்றவன் கர்ணன்.

அப்படி கலியுலக கர்ணனாக ஒருவர் விளங்க வேண்டுமானால் ஒன்பதாம் இடத்தில் சுப கிரகம் இருக்க வேண்டும். ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி உச்சம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி, குருவுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். லக்னாதிபதியை, ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புக் கொண்டவர்கள் தங்கு தடையின்றித் தாராளமாக தான, தர்மம் செய்வார்கள். 
Tags:    

Similar News