ஆன்மிகம்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெருவடைச்சான் சப்பரம் வீதிஉலா நடைபெற்ற போது எடுத்த படம்.

பாடலீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா - தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா

Published On 2018-05-25 03:23 GMT   |   Update On 2018-05-25 03:23 GMT
கடலூரில் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழாவையொட்டி தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நேற்று நள்ளிரவில் நடந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசிப்பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் நடந்து வருகிறது.

இந்த விழாவின் 5-ம் நாளான நேற்று காலை அதிகார நந்திகோபுர தரிசனமும், இரவு 11-30 மணிக்கு தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடந்தது. கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தெருவடைச்சான் சப்பரம் தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து அதிகாலையில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 28-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தேரோட்டமும், இரவு பஞ்சமூர்த்திகள் திருக்கோவிலை அடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 
Tags:    

Similar News