ஆன்மிகம்

நாக வழிபாடு செய்யும் முறைகள்

Published On 2017-07-24 04:42 GMT   |   Update On 2017-07-24 04:42 GMT
பாம்பு புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபட்டால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும்.

தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றிப் பால் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. சூடம் ஏற்றி வழிபாடு செய்து புற்றுக்குப் பால் ஊற்றினால் நல்லது நடக்கும்.



புற்று முழுவதும் மஞ்சளைப் பூசி, அங்கங்கே குங்குமப் பொட்டு வைப்பது தமிழ்நாட்டில் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. சில பெண்கள் புற்றுக்கு முன்பாகப் பொங்கல் இட்டு படைப்பதுண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்தித்து மஞ்சள் நிற எலுமிச்சையை புற்றின் மீது வைக்கும் வழக்கம் உள்ளது.

புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபட்டால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
Tags:    

Similar News