ஆன்மிகம்
நுங்கம்பாக்கம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீசுவரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
மேலும் பல்லக்கு, யானை வாகனம், சவுடல் விமானம், குதிரை வாகனம், தொட்டி உற்சவம், ராவனேஸ்வர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டமும், 17-ந்தேதி மதியம் தீர்த்தவாரியும், அன்று இரவு திருக்கல்யாண உற்சவமும், 18-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு உற்சவமும், 19-ந்தேதி உற்சவ சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது.
மேலும் பல்லக்கு, யானை வாகனம், சவுடல் விமானம், குதிரை வாகனம், தொட்டி உற்சவம், ராவனேஸ்வர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டமும், 17-ந்தேதி மதியம் தீர்த்தவாரியும், அன்று இரவு திருக்கல்யாண உற்சவமும், 18-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு உற்சவமும், 19-ந்தேதி உற்சவ சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது.