ஸ்லோகங்கள்
விநாயகர்

ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம்

Published On 2022-05-27 08:10 GMT   |   Update On 2022-05-27 08:10 GMT
ஆதி சங்கரர் அருளிய இந்த கணேச ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி விநாயகரை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.
ஸதா பால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா!
விதீந்த்ராதிகம் ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி!!
குழந்தை வடிவமானவரே!
தடைகளாகிய மலையை பிளக்கும் வலிமை கொண்டவரே!
பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தின் அபிமானத்திற்குரியவரே!
பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே!
கணங்களின் அதிபதியான விநாயகரே! மங்களமூர்த்தியே! அருள் புரிவீராக.

- ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம். புஜங்க' சந்தத்தில் உள்ளது.
Tags:    

Similar News