ஆன்மிகம்

செவ்வாய் தோஷமா? நரசிம்மரை துதியுங்கள்

Published On 2018-10-30 07:57 GMT   |   Update On 2018-10-30 07:57 GMT
கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றாலோ, கெட்டு இருந்தாலோ லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலோ, அவர் நிற்கின்ற இடத்தைப் பொறுத்து திருமணத்தடை, புத்திர பாக்கியத்தடை, தொழிலில் சிக்கல்கள், வீண் விரயங்கள் போன்றவை ஏற்படும்.

இவர்கள் கீழ்க்கண்ட நரசிம்மர் மந்திரத்தை ஒன்பது முறை தினசரி சொல்லி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள், இடர்கள், தீங்குகள் நீங்கி நன்மைகள் நிச்சயம் அடைவார்கள்.

செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் இந்த மந்திரத்தை 28 முறை ஜபித்தால் மிக உத்தமம். இந்த மந்திரம் ஆச்சாரியார் ஸ்ரீவேதாந்த தேசிகர் அவர்களால் இயற்றப்பட்டதாகும்.

ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகநீத்யகுண்ட மஹிமா
வைகுண்ட கண்டீரவ:
யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸிர க்ருஹ
ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்!!

கடுமையாக செவ்வாயால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய் தோறும் நெய் தீபம் ஒன்பது வாரம் ஏற்றி வந்தால் செவ்வாயால் ஏற்படும் தடைகள் நீங்கும்.

தவிர, பிரதோஷ காலத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு வெல்லம், ஏலக்காய் கலந்த பானகம் நைவேத்யம் செய்து மேற்கண்ட மந்திரத்தைச் சொல்லி வந்தாலும் தடைகள் நீங்கும்.

பெருமானின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி அன்றும் மேற்கண்ட பானக நைவேத்யம் நற்பலன்களைத் தரும்.
Tags:    

Similar News