ஆன்மிகம்
வஹ்னி வாஸினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நோய் தீரும். பூரண உடல் நலத்துடன், உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.
அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும்.
அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள்.
மந்திரம்:
ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பஞ்சமி, கிருஷ்ண பட்ச ஏகாதசி.
பலன்கள்: நோய் தீரும். பூரண உடல் நலத்துடன், உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.
அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள்.
மந்திரம்:
ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பஞ்சமி, கிருஷ்ண பட்ச ஏகாதசி.
பலன்கள்: நோய் தீரும். பூரண உடல் நலத்துடன், உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.