ஆன்மிகம்

வேண்டுதல்களை நிறைவேற்றும் பரிக்கல் நரசிம்மர் ஸ்லோகம்

Published On 2018-07-14 05:28 GMT   |   Update On 2018-07-14 05:28 GMT
பரிக்கல் லட்சுமி நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி நமஹ
வருவாய் வருவாய் நரசிம்மா
வந்தருள் புரிவாய் நரசிம்மா
அனுதினம் வருவாய் நரசிம்மா
அனுக்ரஹம் செய்வாய் நரசிம்மா
மாதா பிதா குரு நீதானே
மனக் கவலையை ஒழிப்பதும் நீதானே
மன மகிழ்ச்சியைத் தருவதும் நீதானே
சுப மங்கள மூர்த்தியும் நீதானே
மனமெனும் வயலை உழவேண்டும்
குரு உபதேச விதையை விதைக்க வேண்டும்
அன்பெனும் நீரைப் பாய்ச்ச வேண்டும்
ஆத்ம பயிரை நாம் வளர்க்க வேண்டும்
கனவு பலித்தது நரசிம்மா எங்கள்
மனமும் குளிர்ந்தது நரசிம்மா
சரணம் அடைந்தோம் நரசிம்மா நாங்கள்
சகலமும் மறந்தோம் நரசிம்மா
Tags:    

Similar News