ஆன்மிகம்

திருக்கார்த்திகை தினமான இன்று பாட வேண்டிய தீப பாடல்

Published On 2017-12-02 08:43 GMT   |   Update On 2017-12-02 08:43 GMT
திருக்கார்த்திகை தீபமான இன்று மாலையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியிற் காட்டா நிற்போம்
வாய்த்த அந்தச் சுடர்நாளில் பசிபிணியில்
லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் அது பணிந்தோர், கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்தி வரம் கொடுப்போம்.
Tags:    

Similar News