ஆன்மிகம்

நாராயணன் அருளால் நவகிரக தோஷம் விலக ஸ்லோகம்

Published On 2017-02-13 09:21 GMT   |   Update On 2017-02-13 09:22 GMT
இத்துதியை தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் விலகி திருமால் திருவருள் கிடைக்கும்.
கநகருசிரா காவ்யாக்யாதா சநைஸ்சரணோசிதா
ச்ரிதகுரு புதா பாஸ்வத் ரூபா த்விஜாதிபஸேவிதா
விஹித விபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே
த்வமஸி மஹதீ விச்வேஷாம் ந: ஸுபா க்ரஹமண்டலீ
                         
பொருள்: திருமாலின் திருவடித் தாமரைகளில் சரணடைந்திருக்கும் நவகிரகங்கள் எப்போதும் எனக்கு சுபங்களை அளிக்கட்டும். அந்த கிரகங்கள் ஏற்படுத்தக்கூடிய எல்லாவகை தோஷங்களையும் அந்த நாராயணனாகிய திருமால் போக்கட்டும். அவருக்கு நமஸ்காரம். (இந்த ஸ்லோகத்தில் சூரியன் முதலிய ஏழு முக்கிய கிரகங்களின் திருப்பெயர்களோடு சாயா கிரகங்களாக விளங்கும் ராகு, கேதுவின் பீஜாக்ஷரங்களும் மறைமுகமாக அமைந்துள்ளன. இத்துதியை தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் விலகி திருமால் திருவருள் சித்திக்கும்.)

Similar News