ஆன்மிகம்

ஐயனே என்ற அடியார்க்கு அருள்வான் ஆறுமுகன்

Published On 2016-12-26 09:05 GMT   |   Update On 2016-12-26 09:42 GMT
முருகனை பிரதான தெய்வமாக கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு அருள் அவன் அருள் வழங்குவான். கீழே முருகனுக்கு உகந்த ஸ்லோகத்தை பார்க்கலாம்.
’ஐயனே என்ற அடியார்க்கு அருள்வான் ஆறுமுகன்’ இது அருள் வாக்கு. முருகனை பிரதான தெய்வமாக கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு அருள் அவன் அருள் வழங்குவான்.

ஆறுமுகம் படைத்த ஐயனே சரணம்
ஆதிசிவன் குமரா அப்பனே சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரவணபவ ஓம் சண்முகா சரணம்
அடியார்க்கு அருள்வாய் அப்பனே சரணம்
ஆடும் மயில் ஏறும் ஆண்டவா சரணம்
ஐங்கரனுக்கு இளையா ஆறுமுகா சரணம்
முருகனே மால்மருகனே சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரவணபவ ஓம் சண்முகா சரணம்
வள்ளிமணவாளனே வடிவேலா சரணம்
புள்ளிமயில் மேலே வருவோனே சரணம்
குஞ்சரி மனமகிழ் குமரேசா சரணம்
கோபாலன் மருகனே குருபரா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரவணபவ ஓம் சண்முகா சரணம்
பண்டார வேடம் கொண்ட பழனியப்பா சரணம்
பழமுதிர்ச் சோலையில் வாழ்பவனே சரணம்
கழுகுமலை வாழும் கந்தா சரணம்
காத்திடுவாய் எங்களை கதிர்வேலா சரணம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரவணபவ ஓம் சண்முகா சரணம்.

Similar News