ஆன்மிகம்

ஐஸ்வர்யங்கள் அருளும் ரங்கநாதாஷ்டகம்

Published On 2016-11-07 11:21 IST   |   Update On 2016-11-07 11:21:00 IST
வைகுண்ட ஏகாதசியன்று இத்துதியை பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.
ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்
பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம்.
(பராசரபட்டர் அருளியது)

பொதுப் பொருள் :

ஏழு மதில்களால் சூழப்பட்ட பிரகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.

- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News