ஆன்மிகம்

7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவமகா மந்திரம்

Published On 2016-10-25 06:04 GMT   |   Update On 2016-10-25 06:04 GMT
முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்களை நீங்கும் சிவமகா மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்
ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்
ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.

இந்த மந்திரத்தை, அதிகாலை குளித்துவிட்டு, மேலே சட்டை அணியாமல், ஈராம்காயாத வேஷ்டியுடன், நீ, ஒரே ஒருமுறை, பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் உனது - அதாவது உன் மனைவி மற்றும் உன் முன்னோர்களாகிய உன் அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும்.

Similar News