ஆன்மிகம்

நவராத்திரி: முதல் நாளுக்குரிய போற்றி

Published On 2016-10-01 11:15 IST   |   Update On 2016-10-01 11:15:00 IST
நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. முதல் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
முதல் நாளுக்குரிய போற்றி
ஓம் பொன்னே போற்றி!
ஓம் மெய்ப்பொருளே போற்றி!
ஓம் போகமே போற்றி!
ஓம் ஞானச் சுடரே போற்றி!
ஓம் பேரின்பக் கடலே போன்றி!
ஓம் குமாரியே போற்றி!
ஓம் குற்றங்களைவாய் போற்றி!
ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!
ஓம் பேரருட்கடலே போற்றி!
ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!
ஓம் அருட்கடலே போற்றி!
ஓம் ஆனந்த அறிவொளி  போற்றி!
ஓம் இருளகற்றுவாய் போற்றி
ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!
ஓம் ஈயும் தயாபரி போற்றி!
ஓம் மங்கள நாயகியே போற்றி!

- இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

Similar News