ஆன்மிகம்

துன்பங்களை போக்கும் நவகிரக ஸ்லோகம்

Published On 2016-09-20 08:51 GMT   |   Update On 2016-09-20 08:51 GMT
நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகல சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
ஆதாரே ப்ரதம: ஸஹஸ்ர கிரண: தாராதிப: ஸவாலயே
மா ஹேயோ மணிபூரகே ஹ்ருதிபுத கண்டேச வாசஸ்பதி:
ப்ருமத்யே ப்ருகு நந்தன: தினமணே: புத்ர த்ரிகூட ஸ்தலே
நாடீ மர்மஸு ராஹு கேது குளிகர: குர்யாத் ஸனோ மங்களம்.

பொதுப் பொருள்: மூலத்தில் கதிரவனும் ஸ்வாதிஷ்டானத்தில் சந்திரனும் மணிபூரகத்தில் சீலமிகு அங்காரகனும் அநாகத்தில் புதனும் விசுத்தியிலே குருவும் சுக்கிரபகவான் ஆக்ஞையிலும் சனிபகவான் சுழிமுனையிலும் நாடிதனில் ராகுவும் மர்மக் குறிதனில் கேதுபகவானும் நின்று எங்களுக்கு எப்போதும் நன்மைகளைப் பெருக்கட்டும்; எங்கள் துயரங்களை விலக்கட்டும்.

(இத்துதியை தினந்தோறும் பாராயணம் செய்து வர நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகன்று நன்மையே நிலைக்கும்.)

Similar News