ஆன்மிகம்

படிப்பில் உயர்வு தரும் மாதங்கி மஹாவித்யா மந்திரம்

Published On 2016-08-12 11:44 IST   |   Update On 2016-08-12 11:44:00 IST
பேச்சு, இசை, வாக்குவன்மை, கலைகளில் உயர்வு தருபவள் அன்னை ஸ்ரீ மாதங்கி தேவி.
பேச்சு, இசை, வாக்குவன்மை, கலைகளில் உயர்வு தருபவள் அன்னை ஸ்ரீ மாதங்கி தேவி.

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலம் எதிரிகள் இல்லாத வாழ்க்கை, சர்வஜன வசீகரம் எனப்படும் எல்லா மக்களுடனும் அன்பும் இணக்கமும் கொண்ட வாழ்வும் கிட்டும்.

புதன், வியாழக்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் சிறிது கற்கண்டு பச்சை கற்பூரம் கலந்த நீர் நிரப்பி இந்த மந்திரத்தை 108 எண்ணிக்கை கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்த நீரை மாணவர்கள், குழந்தைகளை அருந்தச்செய்ய நல்ல நினைவாற்றலும் படிப்பில் உயர்வும் உண்டாகும்.

மந்திரம் :

ஓம் |
ஹ்ரீம் ஐம் ஸ்ரீம்|
நமோ பகவதி உச்சிஷ்டசாண்டாளி |
ஸ்ரீ மாதங்கீச்வரி |
சர்வஜன வசங்கரி ஸ்வாஹா||

இதை ஒரு வளர்பிறை புதன்கிழமை தொடங்கி ஜெபித்து வரவும்.

Similar News