ஆன்மிகம்

எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்

Published On 2016-06-15 11:31 IST   |   Update On 2016-06-15 11:31:00 IST
இந்த இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 'திருஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும் வரும் இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.

வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

Similar News