ஆன்மிகம்
அங்காளம்மன்

மூன்று அமாவாசை அங்காளம்மனுக்கு விரதம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Published On 2021-02-02 05:00 GMT   |   Update On 2021-02-02 05:00 GMT
அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசையில் ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கும் அங்காளம்மனை மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வேண்டியது நிறைவேறும்.
அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் தான் அமாவாசை. மேலும் பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

மூன்று அமாவாசை விரதத்தின் பயன்கள்

அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசையில் ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கும் அங்காளம்மனை மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வேண்டியது நிறைவேறும்.

கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும்.

ஆன்ம பிணிகளாக பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.

ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.

பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாகும்.
Tags:    

Similar News