ஆன்மிகம்

அவ்வையாருக்கு உகந்த ஆடி செவ்வாய் விரதம்

Published On 2018-07-31 14:47 IST   |   Update On 2018-07-31 14:47:00 IST
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை பாட்டிக்கு விரதம் இருக்கும் பாரம்பரிய பழக்கம் தென்மாவட்ட பெண்களிடம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை பாட்டிக்கு விரதம் இருக்கும் பாரம்பரிய பழக்கம் தென்மாவட்ட பெண்களிடம் இன்றும் உள்ளது. செவ்வாய் இரவு பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் கூடுவார்கள். பச்சரிசிமாவுடன் வெல்லம், தேங்காய் கலந்து கொழுக்கடை செய்வார்கள்.இரவு அந்த கொழுக்கட்டைகளை அவ்வைக்கு படைத்து வழிபடுவார்கள்.

ஆண்கள் இந்த பூஜையை பார்க்கவோ, கொழுக்கட்டை சாப்பிடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அவ்வை பாட்டியை நினைத்து நடத்தப்படும் இந்த பூஜையில் பங்கேற்றால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

அது போல பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். 
Tags:    

Similar News