இஸ்லாம்
பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலில் கந்தூரி விழா

பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலில் கந்தூரி விழா

Published On 2021-12-07 08:01 GMT   |   Update On 2021-12-07 08:01 GMT
உடன்குடி அருகே மாநாடு கிராமத்தில் உள்ள பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசல் கந்தூரி விழா நேற்று நிறைவு பெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி அருகே மாநாடு கிராமத்தில் பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலில் கந்தூரி விழா கடந்த மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி குர்ஆன் ஓதப்பட்டு, மார்க்க சொற்பொழிவு நடந்தது.

நிறைவு நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் உடன்குடி புகாரி ஷெரிபு தலைவர் செய்யது நூஹ்முகைதீன் தலைமை தாங்கினார். முகமது முகைதீன், முகமது யூசுப், அஸ்பர், பைஜிர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினர். மதியம் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News