ஆன்மிகம்
கும்பகோணம் பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம், மேலக்காவேரி, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், ஆடுதுறை, கதிராமங்கலம், திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம், மேலக்காவேரி, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், ஆடுதுறை, கதிராமங்கலம், திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சி நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளின்படி வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோன்பு காலத்தில் இரவு 8 மணிக்கு தான் தொழுகை தொடங்குவதால் வழிபாட்டு தலங்கள் திறந்திருப்பதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சி நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளின்படி வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோன்பு காலத்தில் இரவு 8 மணிக்கு தான் தொழுகை தொடங்குவதால் வழிபாட்டு தலங்கள் திறந்திருப்பதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.