தோஷ பரிகாரங்கள்

எதிர்ப்புகள், தடைகள் விலக சொல்ல வேண்டிய வராஹி மந்திரங்கள்...

Published On 2023-06-22 08:18 GMT   |   Update On 2023-06-22 08:18 GMT
  • வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி.
  • கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வராஹி புராணம். வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.

வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. வராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வீட்டில் விளக்கேற்றி வராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.

ஓம் ஐம் க்லெளம் ஐம்

நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி

வராஹி வாராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

என்று சொல்லி வழிபடலாம்.

ஓம் வாம் வராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வராஹி கன்யகாயை நம:

எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வராஹி தேவ்யை நம:

க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்

தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,

லூம் வராஹி லூம் உன்மத்த பைரவீம்

பாதுகாப்பாம். ஸ்வாஹா

எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.

வராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும். வராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.

Tags:    

Similar News