ஆன்மிகம்

வாஸ்து தவறுக்கு நிரந்தர பரிகாரம் உண்டா?

Published On 2018-12-22 08:23 GMT   |   Update On 2018-12-22 08:23 GMT
ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அங்கு வாஸ்து குறைபாடு ஏற்படும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உண்டா என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அந்த இடத்தில் வசிக்கக்கூடிய நபர் மீது நல்ல தாக்கத்தையோ, கெடுதலான தாக்கத்தையோ அந்த கட்டிடம் தினம் தினம் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். அதற்காக கட்டிய வீட்டை இடிக்க முடியாது. ஆனால் சில எளிய பரிகார பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் தீர்வு காணலாம்.

இந்த அடிப்படை தெரியாத மக்கள் பரிகாரம் என்கின்ற பெயரில் வாங்கி வைக்கும் பொருட்களான

1. பிரமிடு

2. செப்பு தகடுகள்

3. கிரிஸ்டல்கள்

4. வாஸ்து பரிகார பூஜைகள்

5. வாஸ்து மணி

6. வாஸ்து மரம்

7. நீர் விழ்ச்சி

8. வாஸ்து குபேர பொம்மைகள்

9. வீட்டைச் சுற்றிலும் செப்பு கம்பி பதித்துக்கொள்வது

10. பாசிடிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி

11. வாசலுக்கு எதிரே கண்ணாடி மாட்டுவது,

12. விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் சிலை வைப்பது

இது போல இன்னும் பல பொருட்கள் உண்டு.

இது போன்ற பொருட்களால் தற்காலிக தீர்வு கிடைப்பது போல தோன்றினாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காது. பொது மக்களாகிய நாம் தான் கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
Tags:    

Similar News