search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vastu pariharam"

    வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். அவை என்னவென்று பார்க்கலாம்.
    ‘எலி வளை ஆனாலும் தனி வளை..’ என்ற பழமொழிக்கேற்ப சொந்த வீட்டில் குடியிருப்பது பெருமையும், மனநிறைவையும் அளிக்கக்கூடிய விஷயம். ஆனால், இன்றைய காலகட்டம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் கொண்டதாக அமைந்துள்ள நிலையில் சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைய பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது பலருக்கும் அனுபவமாக உள்ளது.

    இரண்டு வித முறைகள்

    வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். முதலாவது வழி பூமி வசிய முறை என்றும், இரண்டாவது வழி கிரக வசிய முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

    முதலாவது வழிமுறை


    இந்த வழிமுறையானது ஜோதிட கிரக சிந்தாமணி என்ற பெரிய வருசாதி நூலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது,

    * அஸ்தம், பரணி, திருவோணம் மற்றும் விசாகம் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் அமைந்த நாளில், நட்சத்திரத்தின் நான்காம் பாதம் உள்ள நேரத்தை கணக்கிட்டு கொள்ளவேண்டும்.

    * அன்று செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.

    * மேற்கண்ட இரண்டு நிலைகளும் உள்ள நாளில் வரக்கூடிய கடக லக்னம் அமைந்த நேரத்தில் சுத்தமான மண்ணை சிறிய அளவில் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அதன் மூலம் பூமி, மனை மற்றும் வீடு ஆகிய பாக்கியம் கிடைக்கும் என்று பாடல் வடிவத்தில் கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட முறையில் மண்ணை எடுக்க சுத்தமான ஒரு இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு சுமார் மூன்றடி ஆழத்தில் இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து முன்னதாக வைத்துகொள்வது அவசியம். மேற்கண்ட நேரத்தில் இஷ்ட தெய்வம், வாஸ்து மற்றும் செவ்வாய் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்து பழங்களில் வைக்கப்பட்ட சிறிதளவு மண்ணை பிரசாதமாக உண்பதன் மூலம் சொந்த வீடு அல்லது மனை வாங்கக்கூடிய யோகம் வாய்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.



    இரண்டாவது வழிமுறை

    வீடு அல்லது மனை வாங்க தேவையான வசதிகள் அமைந்த பலருக்கும் எதிர்பாராத தடைகள் காரணமாக அவற்றை வாங்குவது தாமதமாகி கொண்டு இருக்கக்கூடும். அது போன்ற சூழலில் உள்ளவர்களுக்கு வாஸ்து கிரக வசிய முறை என்ற வழி வாஸ்து வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

    ஒரு ஆண்டுக்கு 8 முறை வாஸ்து கண் விழிக்கும் நாளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் கிரக வசிய முறையை கடைப்பிடித்து பயன்பெறலாம்.

    வாஸ்து விழித்தெழும் நாட்கள்

    * சித்திரை - 10-ம் நாள் காலை 8-55 முதல் 9-30 மணி வரை.

    * வைகாசி - 21-ம் நாள் காலை 10-06 முதல் 10-42 மணி வரை.

    * ஆடி - 11-ம் நாள் காலை 7-38 முதல் 8-14 மணி வரை.

    * ஆவணி - 6-ம் நாள் பகல் 3-18 முதல் 3-54 மணி வரை.

    * ஐப்பசி - 11-ம் நாள் காலை 7-42 முதல் 8-18 மணி வரை.

    * கார்த்திகை - 8-ம் நாள் காலை 11-09 முதல் 11-45 மணி வரை.

    * தை - 12-ம் நாள் காலை 10-50 முதல் 11-26 மணி வரை.

    * மாசி - 22-ம் நாள் காலை 10-12 முதல் 10-48 மணி வரை.

    மேற்கண்ட எட்டு நாள்களில் எந்த நாளிலும் கிரக வசிய பூஜையை செய்து கொள்ளலாம் பூஜைகள் வழக்கமான முறைப்படி மங்களன் என்ற செவ்வாய் மற்றும் வாஸ்து புருஷன் ஆகியவர்களுக்கு செய்வது முறை. அதன் மூலம் மனை வாங்குவதில் உள்ள தடைகள், மனை வாங்கிய பிறகு வீடு கட்டுவதில் உள்ள தடைகள் ஆகியவை அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
    ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அங்கு வாஸ்து குறைபாடு ஏற்படும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உண்டா என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அந்த இடத்தில் வசிக்கக்கூடிய நபர் மீது நல்ல தாக்கத்தையோ, கெடுதலான தாக்கத்தையோ அந்த கட்டிடம் தினம் தினம் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். அதற்காக கட்டிய வீட்டை இடிக்க முடியாது. ஆனால் சில எளிய பரிகார பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் தீர்வு காணலாம்.

    இந்த அடிப்படை தெரியாத மக்கள் பரிகாரம் என்கின்ற பெயரில் வாங்கி வைக்கும் பொருட்களான

    1. பிரமிடு

    2. செப்பு தகடுகள்

    3. கிரிஸ்டல்கள்

    4. வாஸ்து பரிகார பூஜைகள்

    5. வாஸ்து மணி

    6. வாஸ்து மரம்

    7. நீர் விழ்ச்சி

    8. வாஸ்து குபேர பொம்மைகள்

    9. வீட்டைச் சுற்றிலும் செப்பு கம்பி பதித்துக்கொள்வது

    10. பாசிடிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி

    11. வாசலுக்கு எதிரே கண்ணாடி மாட்டுவது,

    12. விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் சிலை வைப்பது

    இது போல இன்னும் பல பொருட்கள் உண்டு.

    இது போன்ற பொருட்களால் தற்காலிக தீர்வு கிடைப்பது போல தோன்றினாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காது. பொது மக்களாகிய நாம் தான் கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
    வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ!
    வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ!

    உறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.

    வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை அமைக்கலாம். வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களையும் வைத்திருக்கக் கூடாது.

    தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும். வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும்.

    வீட்டின் அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.

    உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

    வீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.
    ×