ஆன்மிகம்
கர்ப்பதோஷம், களப்பிர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் தீர்க்கும் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாகத் திகழ்வது, புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தோத்தாத்திரி திருக்கோவில்.
பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான தலம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான திருத்தலம், பராந்தகச் சோழன் திருப்பணி செய்த திருக்கோவில், கர்ப்பதோஷம், களப்பிர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் தீர்க்கும் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாகத் திகழ்வது, புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தோத்தாத்திரி திருக்கோவில்.
திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் ஆலயம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான தலமாகப் போற்றப்படுகிறது. எனவே நவக்கிரக தோஷம், கர்ப்ப தோஷம், களப்பிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி, 48 சுற்றுக்கள் சுற்றி வருவது, நன்மை பயப்பதாக அமைந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருபுவனை திருத்தலம்.
திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் ஆலயம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான தலமாகப் போற்றப்படுகிறது. எனவே நவக்கிரக தோஷம், கர்ப்ப தோஷம், களப்பிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி, 48 சுற்றுக்கள் சுற்றி வருவது, நன்மை பயப்பதாக அமைந்துள்ளது.
இத்தலம், தோஷங்கள் தீர்க்கும் கண்கண்ட தலமாக விளங்குகின்றது. குறிப்பாக களப்பிரதோஷம், கர்ப்பதோஷம் மற்றும் சகோதர ஒற்றுமை, கல்வி, பதவி என அனைத்து பிரார்த்தனைகளுக்கும் ஏற்ற தலமாக உள்ளது. குறிப்பாக, கர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், தங்கள் வயதிற்கு ஏற்றபடி எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
வசதி இல்லாதவர்கள் ஐந்து நெய் தீபம் ஏற்றி, கருவறையில் அமைந்துள்ள சிறிய பிரகாரத்தில் 48 முறை சுற்றி வரவேண்டும். இதற்கான பலன் தரும் நேரமாக, புதன் ஓரையில் வியாழன் காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருபுவனை திருத்தலம்.