ஆன்மிகம்

திருமணம் கைக்கூட எளிய பரிகாரம்

Published On 2018-09-28 06:54 GMT   |   Update On 2018-09-28 06:54 GMT
பல்வேறு காரணங்களால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல லேண்டும்.

அது முடிந்ததும் அங்காளபரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

Tags:    

Similar News